புதன், 11 பிப்ரவரி, 2009

' ஆமை புகுந்த வீடு உருப்படாது.'


' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

--------------------------------------தமிழ் வாழ்க!------------------------------------------

7 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா,
    அராயத்தக்க ஆழமான கருத்துக்கள்.
    இந்தத் தலைப்பில் எனது "வல்லமை தாராயோ" வலையில்
    ( http://duraipathivukal.blogspot.com )எனது தரப்பு விளக்கத்தை பிப்பிரவரி 07 ல் கொடுத்திருக்கிறேன்,தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்

    பதிலளிநீக்கு
  2. இளமுனைவர்.பொன்.சரவணன் அவர்களுக்கு வணக்கம்.,
    நான் தாயுமானவன்..தங்களின் வலைபூ கணடேன்.வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.விவாதம் செய்வதற்குரிய கருபொருட்கள் தாங்கி செயல் படும் வண்ணம் அமைந்திருக்கும் வலைபூ..என்னை ம்கவும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் நிறைய பகிர்வேன்.
    அன்புடன்ந்தாயுமானவன்

    பதிலளிநீக்கு
  3. மேலே உள்ள கருத்துக்கான விலாசம்

    பதிலளிநீக்கு
  4. பழமொழியில் தவறாகத் தோன்றுவதை சுட்டிக்காட்டலாம் தவறில்லை,விடுத்து அதை மொத்தமாகப் புறக்கணித்து அதுபோன்ற சாயலில் புதியதாய் ஒன்றை உருவாக்கி அது தான் சரி என்று கூறுவது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை
    "ஆமை புகுந்த வீடும்,ஆமீனா புகுந்த வீடும்......"
    இதில் வரும் "ஆமீனா புகுந்த.."என்பதற்குத்தான் தங்களின் "ஆம்பி பூத்த" என்பது ஒத்து வரும்

    பதிலளிநீக்கு
  5. துரை அவர்களே!ஆமீனா என்பது முதலில் தமிழ்ச்சொல்லே இல்லை என்று அறிக. ஆமீனா புகுந்த வீடு என்னும் பழமொழியை நான் கேள்விப்பட்டதும் இல்லை. எங்காவது அது புழக்கத்தில் இருந்தால் ஆமை புகுந்த வீடு என்னும் பழமொழியைப் பார்த்தே அது தற்காலத்தில் உருவாகி இருக்கவேண்டும். ஆமை புகுந்த வீட்டிற்கு உண்டாகும் பொருள் பொருத்தமற்றதாகத் தோன்றுவதனால் தானே உண்மையை ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

    பதிலளிநீக்கு
  6. தமிழ் தொண்டுக்கு வாழ்த்துகள்.

    ஆனால் பாராண்ட இனம் இன்றோ பதுங்கு குழியில்.. வேறு என்ன சொல்ல..??

    உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

    அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


    உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்



    தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

    பதிலளிநீக்கு
  7. ஆமை விடடிற்குள் வரக்கூடது....?
    தல்லாமை இல்லாமை பொறாமை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.